அமெரிக்காவை மிரட்டிய பனிப்புயல் – 13பேர் பலி

America winter storm bringly deadly cold

அமெரிக்காவின் பனிப்புயல் தாக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயல் தாக்கி வருகிறது. குறிப்பாக லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்புயல் வீசி வருவதால் குறிப்பிட்ட மாகாணங்களுக்கான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. டெக்சாஸ், ஜார்ஜியா, புளோரிடா மாகாணங்களில் மட்டும் பனிப்புயலால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு மாகாணங்களிலும் சேர்ந்த்து மொத்தமாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான பனிப்புயலால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒரு வாரத்துக்கு கடுமையான குளிரின் தாக்குதல் இருக்கும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Articles

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வாசுகி லட்சுமணன்

Superb ❤️🤝🏼💐

Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x