சர்வதேச கிரிக்கெட்டில் உடனே ஓய்வு

அஸ்வினின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்ததால் இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அந்த அறிவிப்பு இடியாக இறங்கியது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வுப் பெறும் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார். அப்போது சக வீரர்களுக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் காரணங்களையும் விவரித்தார். அஸ்வினின் இந்த அறிவிப்பு இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், “பிசிசிஐ மற்றும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிக முக்கியமாக தமது பந்துவீச்சில் கேட்ச்களை பிடித்த ரோகித் சர்மா, கோலி, புஜாரா, ரஹானே ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, பெர்த் முதல் டெஸ்டின்போதே அஷ்வின் ஓய்வு முடிவு குறித்து அறிந்து கொண்டேன். இருப்பினும் பிங்க் பால் அடிலெய்டு டெஸ்ட் போட்டி வரையாவது தொடர்ந்து விளையாடுமாறு கேட்டு கொண்டேன். இந்தியா இதுவரையில் பார்க்காத ஒரு மேட்ச் வின்னர் “அஸ்வின்” என புகழாரம் சூட்டினார்.

 

கடந்த 2010ல் இலங்கைக்கு எதிரான ஹராரே ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார் அஸ்வின். இதுவரை 106 டெஸ்ட்களில் 537, 116 ஒருநாள் போட்டிகளில் 156, 65 சர்வதேச டி-20 போட்டியில் 72 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதன்மூலம் மொத்தம் 287 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 765 விக்கெட்டுடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் .

இந்திய பவுலர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த கும்ளேவுக்கு (619), அடுத்த இடத்தில் 537 விக்கெட்டுகளுடன் கம்பீரமாக நிற்கிறார் அஸ்வின். டெஸ்ட் அரங்கில் அதிவேக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 விக்கெட் சாய்த்த இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார் அஸ்வின்.

இதுவரை 106 டெஸ்டில், 6 சதம், 14 அரைசதம் உட்பட 3503 ரன்கள் எடுத்து, இந்தியாவின் முக்கிய வெற்றிகளில் பங்கெடுத்து இருக்கிறார் அஸ்வின். மேலும் டெஸ்ட் தொடர்களில் 11 முறை தொடர் நாயகன் விருது வென்று, இலங்கையின் முத்தையா முரளிதரன் சாதனையையும் சமன் செய்துள்ளார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றில், தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டும் அஸ்வினுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்படவில்லை. இதனால் டெஸ்ட் அரங்கில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்றவர் என்ற புதிய உலக சாதனையை படைக்கும் வாய்ப்பு அஸ்வினின் சாதனைக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வாசுகி லட்சுமணன்

நன்று

Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x