மஞ்சளில் இத்தனை நன்மைகளா?

மஞ்சள்
மஞ்சளின் பயன்கள்

மஞ்சளின் நன்மைகள்

மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சளில் நிறைந்திருக்கும் குர்குமின், இரும்பு, கரோடின், நியாசின்-விட்டமின் பி ஆகிய சத்துகள் நம் உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கவும், நோய்கள் வராமல் காக்கவும் பெரிதும் பயன்படுகின்றன.

கிருமி நாசினி

மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடலில் தொற்றும் கடுமையான வைரஸையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உள்ளது. தொண்டையில் கிருமித் தொற்றுக்கு மஞ்சள் பால் சிறந்த மருந்தாகும். பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டு கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில்- தொண்டையில் படுமாறு சிறிது சிறிதாக விழுங்க தொண்டை சீராகும்.

சளிக்கும் எலும்பு பிரச்னைக்கும் மருந்து

விரலி மஞ்சளை நல்விளக்கில் சூடு காட்டி, அந்தப் புகையை சுவாசிப்பதால் சளியால் ஏற்படும் மூக்கடைப்பு சரியாகும், ஒற்றைத் தலைவலியும் குணமாகும். மார்பு சளி, ஆஸ்மா போன்றவற்றுக்கும் மஞ்சள் பால் மருந்தாகிறது. பொதுவாக கால்ஷியம் குறைந்தாலே சளி ஏற்படும். மஞ்சள் பால் குடிப்பதால் சளி சரியாவதுடன் எலும்புகளும் தண்டுவடமும் வலுப்பெருகின்றன. உணவுக்குப் பின்பாக, மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத் தூளையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் குழைத்து உட்கொண்டு வர, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் நீங்கும்.  சளி அல்லாத வறட்டு இருமலுக்கு, மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் போட்டுப் பருக குணமாகும்.

வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு

வெறும் வயிற்றில் மஞ்சளை உட்கொண்டால் வயிற்றை சுத்தப்படுத்தும். இரவில் மஞ்சள் பால் அருந்துவதால் குடல் புற்று நோய் வராது, பக்க விளைவுகளையும் தடுக்கும். சிறிது மஞ்சள்தூளுடன் தேன் கலந்து குழைத்து நாக்கால் நக்கி உட்கொண்டால் வயிற்றுப்போக்கை நிறுத்தும்

தோல் நோய்களுக்குத் தீர்வு

தோல் வியாதியை குணப்படுத்துவதில் மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது. உதாரணமாக ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த வேப்பிலையுடன் துணை மருந்தாக மஞ்சள் பயன்படுகிறது. மஞ்சளுடன் குப்பைமேனி இலைகளை சேர்த்து அரைத்து படர் தாமரை போன்ற தோல் பிரச்னைகள் உள்ள இடத்தில் பூசினால் விரைவில் குணமாகும். காயம்பட்ட இடத்தில் தேங்கெண்ணெயில் மஞ்சளைக் குழைத்துப் பூசினால் கிருமித் தொற்று ஏற்பட்டாமலும் சீழ் பிடிக்காமலும் குணமாகும்.

துணை மருந்து

ஒரு மருந்துப் பொருளின் சக்தியைக் கூட்ட துணை மருந்தாக வேப்பிலை, மிளகு போன்றவற்றுடன் மஞ்சள் அதிகம் பயன்படுகிறது. உதாரணமாக, மஞ்சளை தனியாக உட்கொள்வதைவிட மிளகுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள குர்குமினை முழுவதுமாக உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது.

பெண்கள் பிரச்னைகளுக்கு மருந்து

பெண்களின் பிரச்னைகளுக்கு மஞ்சள் அருமருந்தாகிறது. மஞ்சளைத் தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் தொடர்ந்து மஞ்சள் சாப்பிடும் போது, மாதவிடாய் கோளாறுகள்,  நீர்க்கட்டிகள் எதுவும் இருக்காது. இப்பிரச்னைகள் உள்ள பெண்கள், மஞ்சளை  தொடர்ந்து உட்கொண்டால் நீர்க்கட்டிகள் நீங்குவதோடு, மாதவிடாய்க் கோளாறும், ஹார்மோன் செயல்பாடுகளும் சீராகும்.

சுத்தமான மஞ்சள் தூள்

கடைகளில் வாங்கும் மஞ்சள் தூளில் பெரும்பாலும் வியாபார நோக்கத்துடன் பச்சரிசியோடு சேர்த்து அரைக்கிறார்கள், கலரிங் ஏஜெண்ட் பயன்படுத்துகிறார்கள். வேக வைத்து காய வைத்து கடைகளில் விற்கும்  மஞ்சளை விட, பச்சையான மஞ்சளில்தான் குர்குமின் என்ற மருந்துப் பொருள் அதிகம் உள்ளது. அதனால் இயன்றவரை பச்சை மஞ்சளை அரைத்துப் பயன்படுததலாம். அல்லது பச்சை மஞ்சளை (பசு மஞ்சள்) வாங்கி மெலிதாக சீவி காய வைத்து மிக்சியிலோ, அல்லது மில்லில் கொடுத்தோ அரைத்துக்கொள்ளலாம்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
5
0
Would love your thoughts, please comment.x
()
x