மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

கைதான பிரியாணி வியாபாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை, டிச.26 ; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் இச்சம்பவம் தொடர்பாக, நடைபாதை பிரியாணி வியாபாரி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

எஃப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட (FIR) முதல் தகவல் அறிக்கை பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, நண்பருடன் தனியாக இருந்ததை வீடியோவாக எடுத்த ஞானசேகரன், அதனை கல்லூரி டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து மாற்றுச் சான்றிதழை (TC) தர வைப்பேன் எனக்கூறி மிரட்டியதாக அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார்.

மேலும், தான் சொல்வதை கேட்கவில்லை எனில் மாணவியின் தந்தைக்கு அந்த வீடியோவை அனுப்பிவிடுவேன், இல்லையெனில் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக்கூறி ஞானசேகரன் மாணவியை மிரட்டியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நண்பரை விரட்டியடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை

ஆண் நண்பரை மிரட்டி விரட்டியடித்த பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் எஃப்ஐஆரில் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிறகு அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட ஞானசேகரனுக்கு, 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Related Articles

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வாசுகி லட்சுமணன்

நன்று சார்

Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x