இஸ்ரேல் பயணக்கைதிகள் 3 பேரை விடுவித்தது ஹமாஸ்
மூவரும் உடல் மெலிந்து, பலவீனமாக காட்சியளிப்பதால் அதிர்ச்சி

ஜெருசலேம், பிப்.08; காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் பணயக்கைதிகள் மூன்று பேரை ஹமாஸ் விடுவித்தது. அவர்கள் உடல் மெலிந்தும், பலவீனமாகவும், வெளிர் நிறத்துடனும் காணப்பட்டதால், இஸ்ரேல் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். ஜனவரியில் விடுவிக்கப்பட்ட 18 பணயக்கைதிகளைவிட இவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஈடாக 183 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 18 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள், 111 பேர் போரின் போது காசாவில் தடுத்து வைக்கப்பட்டவர்கள்.



