கர்நாடகாவில், ஒப்பந்தங்களில் 60% ஊழல்: குமாரசாமி
ஆதாரங்களுடன் நிரூபிக்க முதலமைச்சர் சித்தராமையா சவால்

பெங்களூரு, ஜன.6 ; கர்நாடகாவில், ஒப்பந்தங்களில் 60 விழுக்காடு ஊழல் நடப்பதாக மத்திய உருக்குத்துறை அமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கமிஷன் தொகை அதிகரித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களே கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டதாக குமாரசாமி குற்றம் சாட்டினார். ஆனால், “அவர்கள் எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டார்கள்,” என்று குமாரசாமி கூறினார், இதனை மறுத்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.







