ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; திமுக தொடர்ந்து முன்னிலை
சந்திரகுமார் 30,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிமுகம்

ஈரோடு, பிப்.08; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அந்தத் தொகுதியில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்.08) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே திமுகவின் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார். மதியம் 12 மணி நிலவரப்படி, அவர் சுமார் 37,000 வாக்குகளைப் பெற்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 30,000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.