உ.பி.யில், 24 வயதே நிரம்பிய செய்தியாளர் தற்கொலை
பாஜக கவுன்சிலரின் உதவியாளர்கள் கொன்றதாக குற்றச்சாட்டு

உன்னாவ், ஜன.6 ; உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், 24 வயதே நிரம்பிய சுபம் சுக்லா என்ற செய்தியாளர் தற்கொலை செய்து கொண்டார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவரும் அவர், தனது வீட்டின் அருகே இ -3 சக்கர மிதிவண்டியின் சார்ஜிங் பாயிண்ட்டாகப் பயன்படுத்தப்படும் அறையில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பாஜகவின் கவுன்சிலர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட சில மாதங்களுக்குப் பின்னர் சுக்லா கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.







