எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐஎஸ்எல் கால்பந்து ஃபைனல்
இன்றிரவு மோகன் பகன் VS பெங்களூரு எஃப்சி அணிகள் மோதல்

கொல்கத்தா, ஏப்.12; ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்றது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்போட்டியில் மோகன் பகன்–பெங்களூரு எஃப்சி அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் தாக்குதல் மற்றும் தடுப்பு ஆட்டத்தில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்கிற ரீதியில் இரு அணிகளும் விளையாடியதால், இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. முன்னணி வீரர்களை கொண்டிருக்கும் இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காணவிருக்கின்றன.