இந்திய அணியின் தேர்வு; சமூக வலைதளங்களில் முரண்
சுப்மன் கில் துணை கேப்டனா?: ரசிகர்கள் எதிர்வினை

மும்பை, ஜன.19; சாம்பியன்ஸ் கோப்பையில், இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் தொடர்வார் என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கில்லின் நியமனம் குறித்து ரசிகர் ஒருவர், “வெறுப்பவர்களின் முகத்தில் கிரிக்கெட் வாரியம் அறைந்துள்ளதாக” பதிவிட்டுள்ளார். விஜய் ஹசாரே தொடரில், 752 ரன்களை குவித்த கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்தும் சிலர் வினவியுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.



