வீட்டில் சுயநினைவின்றி கிடந்த பிரபல பாடகி.!
தற்கொலை முயற்சியா.?

ஹைதராபாத்: பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த 4ஆம் தேதி, நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மயக்க நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். இது தற்கொலை முயற்சி என்று கூறப்படுகிறது. அவர் தங்கியிருந்த குடியிருப்பாளர்கள் சங்கத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 4ஆம் தேதி அன்று போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து, மயக்கத்தில் இருந்த அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியதாக, காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மருத்துவமனையில், கல்பனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவர் அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதாகவும், அவர் சுயநினைவுக்கு திரும்பிய பிறகே மற்ற விவரங்கள் தெரியும் என்று கூறியுள்ளார். தற்போது கல்பனாவின் நிலை நன்றாக இருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
போலீசார் விசாரணை
பாடகி கல்பனா தற்கொலை முயற்சி குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த அன்று, கல்பனாவின் கணவர் சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர். பாடகி கல்பனா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இசைத்துறையில் நன்கு அறியப்பட்டவர். இவர் தொடர்ச்சியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அடிக்கடி மருந்துகளை நாடியதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை ஒரு தீர்வல்ல
உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்பட்டால், சினேகா அறக்கட்டளை எண் – 04424640050 அல்லது டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்சஸின் ஹெல்ப்லைன் – 9152987821 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இதையும் படிங்க: பாலஸ்தீனியர் புத்தகக் கடைகளில் போலீஸ் சோதனை