சுப்மன் கில் மிக அதிகமாக மதிப்பிடப்பட்டவர்: ஸ்ரீகாந்த்
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு மீது சாடல்

சென்னை, ஜன.7 : “சுப்மன் கில் மிக அதிகமாக மதிப்பிடப்பட்ட வீரர்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறை கூறியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஸ்ரீகாந்த், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவை கடுமையாகச் சாடினார். சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்ஷன் போன்ற வீரர்களை தேர்வுக்குழு கவனிக்கத் தவறிவிட்டதாக ஸ்ரீகாந்த் விமர்சித்திருக்கிறார். இந்த மூவரையும் புறக்கணித்ததற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பெரும் கண்ணீர் வடிக்க நேரிட்டதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.







