யானையின் தாக்குதலிருந்து தப்பிய சினிமா குழு
காரை இடித்துத்தள்ளியபோதும் காயமின்றி 'எஸ்கேப்'

திருச்சூர், ஜன.14; கேரள மாநிலம் அதிரப்பள்ளியில், படப்பிடிப்புக்குச் சென்ற சினிமா குழுவினர், காட்டுயானையின் தாக்குதலிலிருந்து உயிர் தப்பினர். ஐந்து பேர் கொண்ட குழுவினர் காரில் சென்றபோது, எதிரே ஒரு யானை ஆக்ரோஷமாக வருவதைப் பார்த்தனர். காரை பின்னோக்கி எடுக்க முடியாத அளவிற்கு, அதன் பின்னால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மூர்க்கத்தனமாக வந்த அந்த யானை, சினிமா குழுவினரின் காரை தந்தத்தால் தாக்கியது. இருப்பினும், காரில் இருந்த அனைவரும் இறங்கி காயங்களின்றி தப்பிவிட்டனர்.



