‘ஷார்ட் பிட்ச்‘ பந்து; வாயடைக்கச் செய்த ஸ்ரேயாஸ்
அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறந்தன; விமர்சனங்கள் தவிடுபொடி

நாக்பூர், பிப்.07; ‘ஷார்ட் பிட்ச்‘ பந்துகளை எதிர்கொள்வதில் பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டை, நாக்பூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் உடைத்தெறிந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஏழாவது ஓவரில், அவர் அடுத்தடுத்து வீசிய இரண்டு ‘ஷார்ட் பிட்ச்‘ பந்துகளை ஸ்ரேயாஸ் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். விளையாடும் லெவன் அணியில் இடம்பெறாத நிலையில்,விராட் கோலிக்கு முழங்கால் பிரச்னை ஏற்பட்டதால், அணியில் ஸ்ரேயாஸ் சேர்க்கப்பட்டார். அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி அரை சதமடித்தார்.







