காயத்திலிருந்து மீண்டார், ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார்
வரும் ஐபிஎல் சீசனில் மீண்டும் விளையாட அனுமதி

ஐதராபாத், மார்ச்.16; காயத்திலிருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் குமார், காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்திருக்கும் அவர், உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் சீசனில், நிதிஷ் குமார் மீண்டும் விளையாடவிருப்பது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புத்துணர்ச்சியூட்டும் செய்தியாக அமைந்திருக்கிறது