ஜோ பைடனிடம் விருதுபெறும் விழாவை தவறவிட்டார் மெஸ்சி
வர இயலாததற்கான காரணத்தை கடிதமான அனுப்பினார்

வாஷிங்டன், ஜன. 5 ; கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிருந்து, உயரிய விருது பெறும் விழாவை தவறவிட்டார். மெஸ்சிக்கு அமெரிக்காவின் Presidential Medal of Freedom என்ற உயரிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், வாஷிங்டனில் நடைபெற்ற விருது விழாவில், மெஸ்சி கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக வெள்ளை மாளிகைக்கு மெஸ்சி அனுப்பியுள்ள கடிதத்தில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில பணிகளால், விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.







