டெல்லியில் 3ஆவது நாளாக கடும் பனிமூட்டம்
ரயில், விமான சேவை கடுமையாக பாதிப்பு

டெல்லி, ஜன.5 ; டெல்லியில் மூன்றாவது நாளாக இன்று கடும் பனிமூட்டம் நிலவியதால் 100 விமானங்கள், 51 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. பாலம் பகுதியில் காலை, 4 மணி முதல் 7.30 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் முற்றிலும் தெரியவில்லை. டெல்லியைப் போன்றே லக்னோ, ஸ்ரீநகர், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இன்று காலை கடும்பனிப்பொழிவு நிலவியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.







