3 இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ்
இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை

மேற்குக்கரை, ஜன.7 ; மேற்குக்கரையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பிரதான சாலையில் சென்ற இரண்டு கார்கள் மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, ஹமாஸ் அமைப்பினர் தப்பியோடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கொலையாளிகளை வேட்டையாடாமல் விடப் போவதில்லை எனக்கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், நப்லஸ் பகுதியை சுற்றிவளைத்து தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.







