“சனாதனம் வலுவாக இருந்தால் நாடு வலுப்பெறும்”
மகாகும்பமேளா மாநாட்டில் யோகி ஆதித்யநாத் பேச்சு

பிரயாக்ராஜ், ஜன.25; சனாதனம் வலுவாக இருந்தால் நாடு வலுப்பெறும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் சனாதன மாநாட்டில் பேசிய அவர், நாட்டில் ஒற்றுமையை வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார். சாதி மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினையை விதைக்க முயற்சிப்பவர்களைக் கண்டித்த அவர், பிரிவினைவாத தந்திரங்களில் இருந்து விலகி, நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். மகாகும்பமேளா, உத்தரப்பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை வழங்கும் என ஆதித்யநாத் தெரிவித்தார்.







