புதுப் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த வழக்கு

சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை

சென்னை, பிப்.07; சென்னை விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சுங்கத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தன்ஷிகா என்பவர், 2023 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

புதுமணப் பெண்ணின் தாலிச்சங்கிலி பறிமுதல்

பிரான்சில் வசித்து வந்த ஜெயகாந்த், மனைவிக்கு விசா கிடைக்கும் வரை அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். விசா கிடைத்ததை அடுத்து பிரான்ஸ் செல்ல சென்னை வந்த தன்ஷிகாவை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவர் அணிந்திருந்த வளையல், தாலிச்சங்கிலி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நகைகளை திருப்பித்தர உத்தரவிடக்கோரி தன்ஷிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தாலிச்சங்கிலி மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நமது மரபுப்படி அதிக எடையில் தாலிச் சங்கிலி அணிவது வழக்கம்; இந்த மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும்; கணவருடன் இன்னும் மண வாழ்க்கையை தொடங்காத பெண்ணின் தாலிச் சங்கிலியை அகற்றிய செயல் நியாயமற்றது எனக் கூறி, நகைகளை திருப்பி ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

பயணிகள் அணிந்திருக்கும் தங்க நகைகளுக்கு சுங்க வரி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சுங்கத்துறை ஆணையருக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x