கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடமிருந்து மணவிலக்கா?
மௌனம் கலைத்தார் தனஸ்ரீ வர்மா..!

டெல்லி, ஜன.9 ; கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடமிருந்து மணவிலக்குப் பெறப் போவதாக வெளியான வதந்திகள் பற்றி அவரது மனைவி தனஸ்ரீ வர்மா மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனஸ்ரீ, கடந்த சில நாட்கள் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆதாரமற்ற, உண்மையல்லாத செய்திகள் சமூக வலைதளங்களில் எளிதில் பரப்பப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அரும்பாடுபட்டு கட்டியெழுப்பிய தனது பெயரை, முகம் தெரியாதவர்கள் சீர்குலைத்துவிடுவதாக தனஸ்ரீ விமர்சித்துள்ளார்.







