‘Bloody Beggar’ படத்தால் ரூ. 8 கோடி இழப்பு

என்ன செய்தார் தெரியுமா இயக்குநர் நெல்சன் திலீப்குமார்?

சென்னை, பிப்.01; தமிழ்த் திரையுலகில் அதிகம் ஊதியம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவர், நெல்சன் திலீப்குமார். ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் 2ஆம் பாகத்தை தொடங்கி உள்ளார். பிரபல இயக்குநரான அவர், அண்மையில் தயாரிப்பாளராகவும் ஆனார்.

‘ப்ளடி பெக்கர்’ படத்தால் ரூ. 8 கோடி இழப்பு

கவினை கதாநாயகனாக வைத்து ‘ப்ளடி பெக்கர்’ என்ற படத்தை நெல்சன் தயாரித்தார். படம் வரவேற்பைப் பெறாததால், விநியோகஸ்தருக்கு ரூ. 8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விசயத்தை நெல்சனின் கவனத்திற்கு விநியோகஸ்தர் கொண்டு செ ன்றார்.

ரூ. 6 கோடியை திரும்பிக்கொடுத்த நெல்சன்..!!

ரூ. 8 கோடி வேண்டாம், ரூ. 6 கோடி கொடுத்தால் போதும் என விநியோகஸ்தர் கூற, உடனே அந்தத் தொகையை நெல்சன் கொடுத்துவிட்டாராம். நெல்சன் திலீப்குமாரின் இச்செயலால் விநியோகஸ்தர் இன்ப அதிர்ச்சியில் உறைந்ததாக திரையுலகில் பேசப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x