“மூன்று பிணைக்கைதிகளை விடுவிக்காவிடில், மீண்டும் போர்”
காஸா மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை

காஸா, பிப்.13; பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் (பிப்.15) விடுவிக்கவில்லை எனில், காஸா மீது மீண்டும் போர் தொடங்குவோம் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தார் பிரதிநிதிகள், கெய்ரோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹமாஸ் நிர்வாகி ஒருவர், சனிக்கிழமை திட்டமிட்டபடி மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, காசா மீது மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். புதிய தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தொலைநோக்கு பார்வையை உறுதி செய்யும் வகையில் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.