“நான் சொன்ன ஒரு லட்சம் தீர்ப்புகள் ‘முருகன்’ கூறியவை”
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பேச்சு

திருப்பத்தூர், பிப்.07; நீதிபதியாக இருந்தபோது தான் கூறிய ஒரு லட்சம் தீர்ப்புகளும் தமிழ்க் கடவுள் முருகன் சொன்னது தான் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சொக்கலிங்கம் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், கட்டளைக் காவடி பழநி பாதயாத்திரை தொடக்க விழா நடைபெற்றது. இதில் நீதியரசர் சொக்கலிங்கம் கலந்துகொண்டு பேசும்போது, தான் 28 ஆண்டுகள் நீதிபதியாக பதவிவகித்த காலத்தில், உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சம் தீர்ப்புகள் சொல்லியிருப்பதாகவும் அவை அனைத்தும் முருகப்பெருமான் கூறியது தான் எனவும் குறிப்பிட்டார்.



