அகலாபாத் ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பெயரால் பாரபட்சம் என எம்எல்ஏ தொடுத்த வழக்கில் அதிருப்தி

டெல்லி, ஜன.9 ; உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ., அப்பாஸ் அன்சாரியின் மனுவை விசாரிக்காமல் தாமதிப்பதாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தனது நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக தான் தாக்கல் செய்த மனுவை அகலாபாத் உயர் நீதிமன்றம் தேர்ந்தெடுத்து புறக்கணித்ததாக அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். பாரபட்சமான அணுகுமுறைக்கு தனது பெயர் தான் காரணம் என்றும் அப்பாஸ் கூறியிருந்தார். இது துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.







