“எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்”
லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ பற்றி பிரியங்கா சோப்ரா கவலை

லாஸ் ஏஞ்சலஸ், ஜன. 9 ; லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தனது எண்ணங்கள் இருப்பதாக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். காதல் கணவர் நிக் ஜோனஸூடன் அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சலஸில் வசித்துவரும் பிரியங்கா, அங்கு பற்றி எரியும் காட்டுத்தீ பற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இன்றிரவு நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்” என பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். இந்தப்பதிவு பிரியங்காவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.







