நயன்தாராவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கண்டிப்பு
இறுதி விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை, ஜன.8 ; நயன்தாரா மீது தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இனி அவகாசம் கோரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறுகோரிக்கை விடுக்கப்பட்டது. இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.







