RCB அணியின் புதிய கேப்டன், ரஜத் படிதார்
தகுதியானவர் என முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து

பெங்களூரு, பிப்.13; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 20ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த மெகா ஏலத்திற்குப் பிறகு, முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி மீண்டும் கேப்டனா அறிவிக்கப்படுவார் எஎ எதிர்பார்ப்பு நிலவியது.
புதிய கேப்டன் யார் என ஊகங்கள் நிலவின
ஆனால், கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன.
இதுபோன்ற சூழலில், ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ரஜத் படிதார். சையத் முஷ்டாக் அலி கோப்பை (டி20) மற்றும் விஜய் ஹசாரே டிராபி (ஒருநாள் போட்டி) ஆகியவற்றில் மத்தியப் பிரதேசத்தை வழிநடத்திய அனுபவம் பெற்றவர்.
கேப்டனாக ரஜத் படிதார் அறிவிப்பு; விராட் கோலி வாழ்த்து
ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள விராட் கோலி, “நானும் மற்ற குழு உறுப்பினர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம், ரஜத்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனைத்து ரசிகர்களின் இதயங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுள்ளீர்கள்; நீங்கள் இந்தப் பதவிக்கு தகுதியானவர்” என்று ரஜத் படிதாரை விராட் கோலி வாழ்த்தியுள்ளார்.