ஹன்சிகா மோத்வானி மீது குடும்ப வன்முறை புகார்
அண்ணி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு

சென்னை, ஜன. 8 ; குடும்ப வன்முறை புகாரில், நடிகை ஹன்சிகா மோத்வானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்தின் மனைவியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கன் நான்சி, இந்தப் புகாரை அளித்துள்ளார். ஹன்சிகாவும் அவரது தாயாரும் சேர்ந்து தனது குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுத்தியதுடன், தன்னை துன்புறுத்தியதாகவும் புகாரில் நான்சி குறிப்பிட்டுள்ளார். தற்போது ஹன்சிகா மோத்வானியின் அண்ணன் பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கன் நான்சியும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர்.







