34 பயணக்கைதிகளை விடுவிக்கத் தயார்: ஹமாஸ்
பட்டியலை இதுவரை தரவில்லை: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்

காஸா, ஜன.6; பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள 34 இஸ்ரேலியர்களை விடுவிக்க தயாராக இருப்பதாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் வழங்கிய பட்டியலின் படி முதல்கட்டமாக 34 பேரை விடுவிக்க தயார் என்று, ஹமாஸ் போராளிக் குழுவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், பணயக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் இன்னும் வழங்கவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.







